ஜோகூர் பாரு: விடுமுறை நாள்களை முன்னிட்டு, சிங்கப்பூரில் இருந்து அதிகமானோர் ஜோகூருக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை முன்னிட்டு, ஜோகூர் காவல்துறையினர் கூடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து வருபவர்கள் மட்டுமல்லாமல் கோலாலம்பூர், வடக்கு மாநிலங்களில் இருந்தும் பயணிகள் வரக்கூடும் என்பதால் அதிக போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்றார் ஜோகூர் மாநில காவல்துறை தலைவர் கமருல் ஜமான் மாமத்.
விபத்து பகுதிகள், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் கூடுதல் காவல்துறையினர் பணியமர்த்தப்படுவார்கள். சாலை விதிகளைப் பின்பற்றுமாறு பயணி களை அவர் கேட்டுக்கொண்டார்.
இருதரப்பின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு கிட்டத்தட்ட 70,000 பேர் சிங்கப்பூரில் இருந்து ஜோகூருக்குள் நுழைந்துள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

