மகிந்த பிரதமர் பதவியில் நீடிக்க 117 உறுப்பினர்கள் ஆதரவு

மகிந்த பிரதமர் பதவியில் நீடிக்க 117 உறுப்பினர்கள் ஆதரவு

1 mins read
89b2a035-aec1-4d2c-9f03-a51beaa75b73
-

கொழும்பு: இலங்கை பிர­த­மர் மகிந்த ராஜ­பச்சே பத­வி­யில் நீடிக்க 117 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர். அதிபரும் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இலங்கை அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே, பிர­த­மர் மகிந்த ராஜ­பக்சே, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆகி­யோர் நேற்று முன்­தி­னம் சந்­தித்து பேசி­னார்­கள்.

இச்­சந்­திப்­பில் 109 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நேர­டி­யாக கலந்து கொண்­ட­னர். வேறு கார­ணங்­களால் 8 பேர் செல்­ல­வில்லை.

பிர­த­மர் பதவி விலகி, புதிய அனைத்­துக் கட்சி அர­சாங்­கம் அமைக்­கப்­ப­ட­வேண்­டும் என்று அதி­பர் கோத்­த­பா­ய­விற்­குக் கடி­தம் எழு­திய டல்­லஸ் அழ­கப்­பெ­ரு­மா­வும் இச்­சந்­திப்­பில் கலந்­து­கொண்­டார்.

கார­சா­ர­மான விவா­தங்­க­ளுக்­குப் பிறகு, மகிந்­த­வும் கோத்­தா­பா­ய­வும் தங்­க­ளது பத­வி­யில் தொடர வேண்­டும் என்ற தங்­க­ளது கருத்தை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் முன்­வைத்­த­னர்.

மூத்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர், மகிந்த பிர­த­மர் பத­வி­யில் நீடிப்­ப­தில் யாருக்­கா­வது ஆட்­சே­பம் இருக்­கி­றதா என்று கேட்­டார். யாரும் அதற்கு ஆட்­சே­பம் தெரி­விக்­க­வில்லை.

பிறகு பேசிய அதி­பர், யாரா­வது தனக்கு பெரும்­பான்மை இருப்­பதை நிரூ­பித்­தால் அவர், நாட்­டின் பிர­த­ம­ரா­க­லாம் என்று சொன்­னார். மகிந்தவைப் பதவி விலகும்படி நான் கூறவில்லை. எனவே, அவர் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிப்பார் எனவும் கோத்தாபாய சொன்னார்.

நாட்­டில் நில­வும் தற்­போ­தைய நெருக்­க­டி­யைச் சரி செய்ய பொரு­ளா­தார நிபு­ணர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் பிரச்­சி­னை­களுக்­குத் தீர்வு காணப்­பட்டு வரு­வ­தா­க­வும் மகிந்த சொன்­னார்.