கார்கிவ்: ரஷ்யப் படைகள் உக்ரேனின் கார்கிவ் நகரிலும் தனது தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
முந்திய நாள் கியவ் நகரின் ஏவுகணை உற்பத்திக் கட்டடத்தின்மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
கார்கிவ் நகரை உக்ரேன் மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தாலும், ரஷ்யப் படைகள் அங்கு தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
ரஷ்யாவின் இத்ததாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக கார்கிவ் வட்டார ராணுவ நிர்வாகம் சொன்னது.
கிழக்கு உக்ரேனில் உள்ள சொலோவியோ என்ற கிராமத்தில் ரஷ்யப் படைகள், தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியதாக அதன் ராணுவ தலைவர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.
"கார்கிவ், டோன்பாஸ் நகரங்களில் மிகவும் கடினமான சூழல் நிலவுகிறது.
"ஆனால் கார்கிவ்வில் எங்கள் ராணுவ, உளவுப் படையினர் வெற்றி களைப் பெற்றுள்ளனர்," என்று உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி சொன்னார்.
கார்கிவ்விற்கு அருகில் உள்ள முக்கிய கிராமத்தை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரேன் படைகள் கூறின.
ஒரே இரவில் 389 உக்ரேனிய இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ரஷ்யாமீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவது ரஷ்யா-உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி யாகும் என்று சீன ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சொன்னார்.
ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்ய, உக்ரேன் அதிகாரிகள் காணொளி வாயிலாக தினமும் சந்தித்து பேசுவதாகவும் அவர் தெரிவித் தார்.
அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்வது கடினமானது என்றாலும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளதாகவும் லாவ்ரோவ் சொன்னார்.
ஆனால், ரஷ்யா மீதான தடைகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்று ஸெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதற்கிடையே, ரஷ்யப் படைகள், தங்கள் கைப்பற்றிய உக்ரேனியப் பகுதிகளில் இருந்த பல மில்லியன் டன் தானியங்களைத் திருடிவிட்டதாக உக்ரேனின் துணை விவசாய அமைச்சர் சொன்னார்.

