சோங்சிங்: சீனாவின் திபெத் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சோங்சிங்கில் இருந்து நேற்று புறப்பட இருந்த நிலையில் தீப்பிடித்தது.
அதனையடுத்து விமானத்தைக் கிளப்பும் முயற்சி கைவிடப்பட்டது.
சம்பவத்தில் யாரும் மாண்டதாகத் தகவல் இல்லை. 113 பயணிகளுடன் ஒன்பது விமானச் சிப்பந்திகள் அதில் இருந்தனர்.
அவர்களில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்தது. ஆனால் காயமடைந்தோர் எண்ணிக்கையை அது வெளியிடவில்லை.
பயணிகள் விமானம் தீப்பிடித்த சம்பவத்தையடுத்து சோங்சிங் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதை ஒன்று மூடப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.