வடகொரியாவில் ஓமிக்ரானால் முடக்கநிலை

வடகொரியாவில் ஓமிக்ரானால் முடக்கநிலை

2 mins read
61f71c0e-5f25-45c2-a669-fe3431fde16a
2020 டிசம்பரில் சிற்றங்காடி ஒன்றில் கிருமிநாசினி தெளிக்கும் சுகாதாரத் துறை ஊழியர்கள். கோப்புப் படம்: ஏஎஃப்பி -

பியோங்­யாங்: வட­கொ­ரி­யா­வில் முதல்­மு­றை­யாக கொவிட்-19 கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தாக அதி­கா­ர­பூர்­வ­மாக உறுதிசெய்யப் பட்ட பிறகு, அந்­நாட்­டில் தேசிய அள­வி­லான முடக்­க­நிலை அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

வட­கொ­ரிய அர­சாங்க ஊட­க­மான 'கேசி­என்ஏ' இதனை உறு­திப்­ப­டுத்­தி­யது.

தலை­ந­கர் பியோங்­யாங்­கில் இவ்­வா­ரத் தொடக்­கத்­தில் ஓமிக்­ரான ரக கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் கண்­ட­றி­யப்­பட்­ட­தா­கக் கூறிய அர­சாங்க ஊட­கம், எத்­தனை பேர் பாதிக்­கப்­பட்­ட­னர் என்ற தக­வலை வெளி­யி­ட­வில்லை.

முன்­ன­தாக, உலக நாடு­கள் வட­கொ­ரி­யா­விற்கு தடுப்­பூ­சி­களை விநி­யோ­கிக்க முன்­வந்­த­போ­தும் பியோங்­யாங் அதனை ஏற்காமல் நிரா­க­ரித்­துவிட்டது.

எல்­லை­களை மூடி­ய­தன்­வழி கொவிட்-19 நோய்ப்­ப­ர­வ­லைத் தடுத்­து­விட்­ட­தாக அது சொல்­லி­வந்­துள்­ளது. இருப்­பி­னும் வட­கொ­ரி­யா­வில் நீண்­ட­கா­ல­மா­கவே கிரு­மிப்­ப­ர­வல் நில­வு­வ­தாக வல்­லு­நர்­கள் சந்­தே­கிக்­கின்­ற­னர்.

அனைத்­து­ல­கச் சமூ­கம் மில்­லி­யன் ­க­ணக்­கில் 'ஆஸ்­டி­ரா­ஸெ­னகா', 'சினோ­வேக்' தடுப்­பூ­சி­களை வழங்க முன்­வந்­த­போ­தும் அவற்றை நிரா­க­ரித்­த­தன் மூலம் 25 மில்­லி­யன் மக்­க­ளின் ஆரோக்­கி­யத்­திற்கு ஆபத்து விளை­வித்­த­தாக வட­கொ­ரி­யாவை அவர்­கள் சாடி­னர்.

வட­கொ­ரி­யா­வின் சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு வலு­வாக இல்லை என்­பது குறித்­தும் அவர்­கள் கவலை எழுப்­பி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், வட­கொ­ரி­யாவின் தலை­வர் கிம் ஜோங் உன், நாட்டில் கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லைத் துடைத்­தொ­ழிக்க உறுதி தெரி­வித்­திருப்பதாக 'கேசி­என்ஏ' தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

கிரு­மிப்­ப­ர­வலை, கடு­மை­யான தேசிய நெருக்­க­டி­நிலை என்­றும் அரசாங்க ஊடகம் வர்­ணித்­துள்­ளது.

நாட­ளா­விய முடக்­க­நி­லை­யின்­கீழ், வட்­டார அள­வி­லும் முடக்­கம் அறி­விக்­கப்­பட்­ட­து­டன் வழி­பாட்­டுத் தலங்­களில் கூடு­வ­தற்­கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தத் தக­வல் வெளி­யானதை அடுத்து மீண்­டும் மனி­த­நேய உதவி வழங்க முன்­வந்­துள்­ளது தென்­கொ­ரிய அர­சாங்­கம்.

ஆனால் வட­கொ­ரியா இன்­னும் அதற்கு பதில் சொல்­ல­வில்லை.