'மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படவேண்டும்'

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கைதுசெய்ய்பபடவேண்டும் என்று அந்நாட்டின் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.


இலங்கை அரசாங்கங்கத்தை ஆதரிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சில நாள்களுக்கு முன்பு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினர்.


அதைத் தொடர்ந்து புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள திரு ரணில் விக்ரமசிங்கே, திரு மகிந்த ராஜபக்சேவைக் கைதுசெய்யவேண்டும் என்று அவர்கள் சொல்கின்றனர்.


திரு ராஜபக்சேவைப் பதவி விலகச் செய்ய ஆர்ப்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.


அதையொட்டி தங்களைத் தாக்க அவர் தமது ஆதரவாளர்களைத் தூண்டியதாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.


இதைத் தொடர்ந்து திரு விக்ரமசிங்கேயின் அதிகாரத்துவ வீட்டிற்கு வெளியே சில ஆர்ப்பாட்டாக்காரர்கள் வெள்ளிக்கிழமையன்று (மே 13) திரண்டனர்.


இதற்கு முன்பு ஐந்து முறை பிரதமராகப் பதவி வகித்த அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.


திரு விக்ரமசிங்கே, ராஜபக்சேவின் குடும்பத்துடன் நெருக்கமானவர் என்பது அவர்களின் வாதம்.


திரு மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான திரு கோத்தபாய ராஜபக்சே, தற்போது இலங்கையின் அதிபராகப் பதவி வகிக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!