பியோங்யாங்: வடகொரியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மேலும் 21 பேர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 174,440 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக அந்நாட்டின் அரசுக்குச் சொந்தமான ஊடகம் தகவல் வெளியிட்டது.
இதுவரை 81,430 பேர் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.