வடகொரியாவில் இதுவரை கொவிட்-19 தொற்றால் 42 பேர் மாண்டுவிட்டனர்.
அந்த நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு நான்கு நாள்கள் ஆகிறது.
கொவிட்-19 பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர துரித நடவடிக்கை வடகொரியா எடுத்துவருவதாக அதிகாரத்துவ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் கூறியது.
அதனுடன் பொதுமக்களுக்கு தீவிரமாக கிருமிப் பரிசோதனை செய்து வருவதாகவும் அது சொன்னது.
கொவிட்-19 கிருமிப் பரவலால் தம் நாடு பெரும் சிக்கலில் இருப்பதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் சனிக்கிழமை அன்று கூறினார்.
தொற்றுப் பரவலை முடிறியடிக்க அவர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
கூடுதலான 296,180 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
வடகொரியாவில் இதுவரை 820,620 பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 324,550 பேருக்கு சிகிச்சை வழங்கப்ட்டு வருகிறது.
ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு உறுதியாக கொரோனா தொற்று உள்ளது என்பதை வடகொரியா தெரிவிக்கவில்லை.