வடகொரியாவில் கொரோனா தொற்றால் 42 பேர் மரணம்

வடகொரியாவில் இதுவரை கொவிட்-19 தொற்றால் 42 பேர் மாண்டுவிட்டனர்.

அந்த நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு நான்கு நாள்கள் ஆகிறது.

கொவிட்-19 பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர துரித நடவடிக்கை வடகொரியா எடுத்துவருவதாக அதிகாரத்துவ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் கூறியது.

அதனுடன் பொதுமக்களுக்கு தீவிரமாக கிருமிப் பரிசோதனை செய்து வருவதாகவும் அது சொன்னது.

கொவிட்-19 கிருமிப் பரவலால் தம் நாடு பெரும் சிக்கலில் இருப்பதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் சனிக்கிழமை அன்று கூறினார்.

தொற்றுப் பரவலை முடிறியடிக்க அவர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

கூடுதலான 296,180 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

வடகொரியாவில் இதுவரை 820,620 பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 324,550 பேருக்கு சிகிச்சை வழங்கப்ட்டு வருகிறது.

ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு உறுதியாக கொரோனா தொற்று உள்ளது என்பதை வடகொரியா தெரிவிக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!