ஷாங்காய்: ஆறு வாரங்களுக்கு மேற்பட்ட கடுமையான முடக்கநிலைக்குப் பிறகு ஷாங்காயில் இன்று முதல் வர்த்தக நடவடிக்கைகள் படிப்படியாக மீண்டும் தொடங்குகிறது.
"கடைத்தொகுதிகள், பேரங்காடிகள் மீண்டும் செயல்படத் தொடங்கும். அங்கு 'ஒழுங்குபடுத்தப்பட்ட' முறையில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
"முடித் திருத்தகங்கள், காய்கறிச் சந்தைகளில் குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களுக்கு அனுமதியுண்டு," என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஷாங்காய் நகரத் துணை மேயர் சென் டோங் சொன்னார்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த எந்த விவரத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.
ஷாங்காயில் நேற்று 1,369 தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன. முக்கியமாக, வெள்ளிக்கிழமையன்று தனிமைப்படுத்தல் மையங்களுக்கு வெளியே தொற்றுச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
இதற்கிடையே, பெய்ஜிங்கில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் உள்ளன.
பொழுதுபோக்கு கூடங்கள் மூடப்பட்டுள்ளன. உணவகங்களில் உணவருந்த தடை, வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை என பெய்ஜிங்கில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.

