கோலாலம்பூர்: மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மறைமுக அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சரை, மலேசிய வெளியுறவு அமைச்சர் சைபுதீன் அப்துல்லா சந்தித்தார்.
10 உறுப்பினர்களைக் கொண்ட ஆசியான் குழுவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வாஷிங்டனில் நடந்த இரண்டு நாள் உச்சிநிலை மாநாட்டிற்குப் பிறகு, அவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு மியன்மார் ராணுவ ஆட்சிக் குழுவிற்கு அழைப்பில்லை.
சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் சைபுதீன், "மியன்மாரில் அமைதியையும் ஜனநாயகத்தையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கு மலேசியா துணை நிற்கும்," என்று மியன்மார் அமைச்சரிடம் கூறியதாக பதிவிட்டிருந்தார்.
என்யூஜி எனும் மறைமுக அரசாங்கத்துடனோ, தீவிரவாதிகள் என்று கூறப்படும் ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்களுடனோ எந்த நாடும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று ராணுவ ஆட்சிக் குழு தொடர்ந்து கூறி வருகிறது.

