மரியபோல்: ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரேனிய வீரர்களின் நலன் குறித்து தற்போது கவலை எழுந்துள்ளது. வீரர்களை ஒப்படைப்பது குறித்து எந்த சமரசமோ, ஒப்பந்தமோ மேற்கொள்ளப்படவில்லை என்று ரஷ்யா கூறியதே கவலைக்குக் காரணமாகும்.
மரியபோல் எஃகு ஆலையில் சிக்கிக்கொண்ட உக்ரேனிய வீரர்கள் பல வாரங்களுக்குப் பிறகு சென்ற திங்கட்கிழமை முதல் சரணடையத் தொடங்கினர்.
அப்போது முதல் 959 வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்ததாகவும் அவர்கள் ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள ஒலேநிவ்கா நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் ரஷ்ய உளவுப் பிரிவு சொன்னது.
அவர்களில் பெண்கள் சிலர் உள்ளதை ராய்ட்டர்ஸ் காணொளி ஒன்று காட்டியது. இன்னும் எத்தனை பேர் ஆலைக்குள் சிக்கியிருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அளித்த உத்தரவாதத்தின்படி அனைத்துலக விதிகளுக்கு ஏற்ப, உக்ரேனிய வீரர்கள் நடத்தப்படுவார்கள் என்று ரஷ்யா கூறுகிறது.
ஐநாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி, இந்த விஷயத்தில் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று டுவீட் செய்துள்ளார். அதில், "அசோவ்ஸ்டால் எஃகு ஆலையில் இருந்த உக்ரேன் வீரர்கள் எந்தவொரு நிபந்தனையும் இன்றி சரணடைந்துள்ளனர்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ரஷ்யா கூறிவரும் 'உக்ரேனிய ஆட்சிக் குற்றங்கள்' குறித்து சரணடைந்தவர்களிடம் விசாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
உக்ரேன் மீதான படையெடுப்பில் மரியபோலில் உக்ரேன் வீரர்கள் சரணடைந்தது ரஷ்யாவிற்கு பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. அதே வேளையில், டோன்பாசை முழுமையாக கைப்பற்றத் துடிக்கும் ரஷ்ய வீரர்கள் விரட்டியடிக்கப்படு வதாக உக்ரேன் கூறுகிறது.
இதற்கிடையே, சுவீடனும் ஃபின்லாந்தும் நேட்டோ கூட்ட மைப்பில் இணைவதற்கு நேற்று அதிகாரபூர்வமாக விண்ணப்பித் தன.
உக்ரேன் வீரர்கள் நிபந்தனை எதுவுமின்றி சரணடைந்ததாக சொல்கிறது ரஷ்யா

