சீனாவில் விமான விபத்து வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக அமெரிக்கா சந்தேகம்

சீனாவில் விமான விபத்து வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக அமெரிக்கா சந்தேகம்

1 mins read
cb8c6ed2-da47-4f73-94c8-3c5c8e7dcd69
-

வா‌ஷிங்­டன்: சீனா­வில் சென்ற மார்ச் மாதம் 132 பேரு­டன் மலை­யில் விழுந்து நொறுங்­கிய விமா­னத்தை யாரோ வேண்டுமென்றே செங்­குத்­தாக செலுத்தி விபத்­துக்­குள்­ளாக்­கி­யி­ருக்­க­லாம் என்று கறுப்­புப் பெட்டி ஆய்­வில் சந்தேகிக்கப்படுகிறது.

கறுப்­புப் பெட்­டியை ஆய்வு செய்யும் அமெ­ரிக்க ஆய்­வா­ளர்­களுக்கு நெருக்­க­மா­ன­வர்­களை மேற்­கோள்­காட்டி தி வால் ஸ்தி­ரீட் ஜர்­னல் சஞ்கிகை செய்தி கூறு­கிறது.

தொழில்­நுட்பக் கோளா­று கார­ண­மாக விபத்து நேரிட்­டி­ருக்­க­லாம் என்­ப­தற்­கான எந்த ஆதா­ர­மும் இது­வரை கிடைக்­க­வில்லை என்­ப­தை­யும் அச்­செய்தி சுட்­டி­யது.

விமா­னி­கள் அறை­யில் இருந்த யாரோ ஒரு­வர்­தான், விமா­னத்தை வேண்­டு­மென்றே செங்­குத்­தாக செலுத்த கட்­டாய உத்­த­ர­விட்­டி­ருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது. அவர் சக விமா­னி­யா­கவோ அல்­லது வேறு யாரா­க­வோ­கூட இருக்­க­லாம் என்­றும் நம்­பப்­ப­டு­கிறது.

29 ஆயி­ரம் அடி உய­ரத்­தில் பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னம், திடீ­ரென்று 90 டிகிரி கோணத்­தில் கீழி­றங்­கத் தொடங்கி, சில நிமி­டங்­களில் தரை­யில் விழுந்­தது.

போயிங் விமான தயா­ரிப்பு நிறு­வ­னம் இது­பற்றி கருத்து தெரி­விக்க மறுத்­து­விட்­டது.

சைனா ஈஸ்­டர்ன் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான போயிங் 737-800 ரக விமா­னம், அந்­நாட்­டின் குன்­மிங் நக­ரில் இருந்து குவாங்‌சூ நக­ருக்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி புறப்­பட்­டது.

குவாங்சி மாநி­லத்­தில் உள்ள மலைப்­ப­கு­திக்கு மேல் பறந்து கொண்­டி­ருந்­த­போது எதிர்­பா­ரா­த­வி­த­மாக கீழே விழுந்து நொறுங்கி தீப்­பி­டித்து எரிந்­தது இந்த விமா

னம்.

இந்த விமா­னத்­தில் 123 பய­ணி­கள், 9 ஊழி­யர்­கள் என அனை­வரும் உயி­ரி­ழந்­த­னர். சீன வர­லாற்­றிலேயே ஆக மோச­மான விபத்­தா­கும் இது.