வடகொரியாவில் கிருமிப் பரவல்; சீன மக்களுக்குப் பரிசோதனை

வடகொரியாவில் கிருமிப் பரவல்; சீன மக்களுக்குப் பரிசோதனை

1 mins read
0fce893c-1607-4b52-8049-7db1e962c8ac
வடகொரிய எல்லையை ஒட்டியுள்ளா சீன நகரமான டாலியனில் பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

பெய்­ஜிங்: கிரு­மிப் பர­வல் முதல் முறை­யாக தலை­தூக்­கி­யுள்ள வட­கொ­ரி­யாவை ஒட்­டி­யுள்ள சீன நக­ரத்­தில் முன்­கூட்­டியே பரி­சோ­த­னையை தொடங்­கி­யுள்­ளது சீனா.

வட­கொ­ரி­யா­வில் சென்ற வாரம் தொற்று கண்­ட­றி­யப்­பட்ட பிறகு, கிட்­டத்­தட்ட 1.7 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தைத் தொடர்ந்து சீனா முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­விட்­டுள்­ளது.

இருப்­பி­னும், வட­கொ­ரி­யா­வில் இருந்து 300 கி.மீ. தூரத்­தில் உள்ள டாலி­யன் நக­ரத்­தி­லும் தொற்­றுச் சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இதை­ய­டுத்து, அந்­ந­கர மக்­கள் நேற்று முதல் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும் என்று அதி­கா­ரி­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

தியஜென் நகரத்தில் சுரங்க நிலையங்கள் மூடப்பட்டன. பெய்ஜிங்கில் இன்னும் கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன. ‌ஷாங்காயில் தொற்றுச் சம்பவங்கள் குறைந்து வருகின்றன.