வடகொரியாவில் கொவிட்-19 தொற்று ஏறுமுகம்

வடகொரியாவில் கொவிட்-19 தொற்று ஏறுமுகம்

1 mins read
1ee97206-4a5e-4fe3-8fcb-a2b98212fb40
-

பியோங்­யாங்: வட­கொ­ரி­யா­வில் கொவிட்-19 தொற்­றி­ய­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­பவர்­க­ளின் எண்­ணிக்கை இரண்டு மில்­லி­யனை நெருங்கி உள்­ளது. கூடு­த­லாக 262,270 பேருக்கு கொவிட்-19 தொற்­றி­ய­தாக வட­கொ­ரியா நேற்று கூறி­யது.

அங்கு கொவிட்-19 தொற்றால் மேலும் ஒரு­வர் மாண்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது. அதன் மூலம், வட­கொ­ரி­யா­வில் கொவிட்-19 தொற்­றால் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 63 ஆக உயர்ந்­துள்­ளது.

வட­கொ­ரி­யா­வில் கொவிட்-19 தொற்­றி­ய­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யு­டன் ஒப்­பி­டும்­போது மரண எண்­ணிக்கை மிகக் குறை­வாக உள்­ளது என்று நிபு­ணர்­கள் கூறி­னர்.

ஏப்­ரல் மாதக் கடை­சி­யி­லி­ருந்து 1.98 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­குக் காய்ச்­சல் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அதி­கா­ரத்­துவ கேசி­என்ஏ செய்தி நிறு­வ­னம் கூறி­யது.

அவர்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்­குக் கொவிட்-19 தொற்றி இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது.

குறைந்­தது 740,160 பேர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர் என்று கேசி­என்ஏ கூறி­யது.

கொரோனா பர­வல் ஏற்­பட்­டி­ருப்­பது பற்றி கடந்த வாரம் கண்­ட­றி­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து, அதைச் சமா­ளிக்க வட­கொ­ரியா திணறி வரு­கிறது.

கிரு­மிப் பரி­சோ­த­னை­க­ளுக்­கான வச­தி­கள், சாத­னங்­கள், மருந்­து­கள் அங்கு போத­வில்லை.

தொற்­றுப் பர­வலை அதி­கா­ரி­கள் மெத்­த­ன­மா­க­வும் முதிர்ச்சி இல்­லா­மலும் கையாண்டு வரு­வ­தாக வட­கொ­ரி­யத் தலை­வர் கிம் ஜோங் உன் சாடி­னார்.