தவறுதலாக பெற்றுக்கொண்ட $499,000ஐ திருப்பிக் கொடுக்கத் தவறியவர் கைது

தவறுதலாக பெற்றுக்கொண்ட $499,000ஐ திருப்பிக் கொடுக்கத் தவறியவர் கைது

2 mins read
e4bd67f8-d3be-4b26-8e7a-4b071e8ed16a
-

தோக்கியோ: தவ­று­த­லாக தமக்கு வழங்­கப்­பட்ட கொவிட்-19 நிதியை இணை­ய­வழி சூதாட்­டக் கூடங்­களில் செலவு செய்த ஜப்­பா­னிய ஆட­வரை அந்த நாட்டு காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

அந்த 24 வயது ஆட­வர் பணத்தைச் சிறு­கச் சிறு­கத் திருப்பித் தரப்­போ­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

கொவிட்-19 உதவி நிதி­யாக 463 வச­தி­கு­றைந்த குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய 46.3 மில்­லி­யன் யென் ($499,000), அந்த ஆட­வரின் வங்­கிக் கணக்­கில் கடந்த மாதம் தவ­று­த­லாக செலுத்­தப்­பட்­டது.

ஜப்­பா­னின் மேற்கு வட்­டா­ரத்­தில் உள்ள ஆபு எனும் ஊரில் அந்­தச் சம்­ப­வம் நடந்­தது.

தங்­கள் தவற்றை உணர்ந்த அதி­கா­ரி­கள் பணத்­தைத் திரும்பப் பெறு­வ­தற்­காக ஆட­வ­ரைத் தொடர்பு­கொள்ள படா­த­பாடு பட்­ட­னர்.

அவ­ரைத் தொலை­பே­சி­யில் அழைத்­த­னர், கடி­தங்­கள் அனுப்­பி­னர், நேரில் சென்­றும் பார்த்­த­னர். ஆனால், அந்த ஆட­வ­ரி­ட­ம் இருந்து எந்­தப் பதி­லும் இல்லை. அவர் எங்கு­போ­னார் என்­றும் தெரி­ய­வில்லை.

அத­னால் வேறு வழி­யில்­லா­மல் அவ­ருக்கு எதி­ராக கடந்த வாரம் வழக்கு தொடுக்­கப்­பட்­டது. அதற்குப் பின்­னர்­தான் வழிக்கு வந்­தார் அந்த இளை­ஞர். கிடைத்த பணத்தை இணைய சூதாட்­டக் கூடத்­தில் செலவு செய்­து­விட்­ட­தா­க­வும் இப்­போது தம்­மிடம் அவ்­வ­ளவு பணம் இல்லை என்­றும் அவர் கூறி­னார்.

இருப்­பி­னும், எப்­ப­டி­யா­வது பணத்தைத் திருப்­பித் தந்­து­விட அவர் ஒப்புக்­கொண்­டுள்­ளார். ஆனால், வேறு வங்­கிக் கணக்­கில் அவர் பணத்­தைப் பதுக்கி வைத்­துள்­ளார் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

இந்­தச் சம்­ப­வம் ஜப்­பா­னில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­ உள்ளது. தொலைக்­காட்சி நிகழ்ச்சி­களில் அது விவா­திக்­கப்­பட்­டு உள்­ளது.

தவறு செய்த ஆபு அதி­கா­ரி­களை பொது­மக்­கள் தொடர்ந்து தொலை­பேசி, மின்­னஞ்­சல் வாயி­லாக கடிந்து­கொள்­கின்­ற­னர். இந்­நி­லை­யில் பண உதவி கிடைக்­கா­மல்­போன குடும்­பங்­க­ளுக்கு நிதி வழங்­கப்­பட்டு­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.