ஹனோய்: அம்பு எய்தல் போட்டியில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர் வீராங்கனை ஒருவர் தங்கம் வென்றுள்ளார். வியட்னாமில் நடைபெற்றுவரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் 39வது தங்கப் பதக்கத்தை கொண்டெசா லோ, 27, வென்றார். மகளிருக்கான தனிநபர் இறுதிச்சுற்றில் வியட்னாமைச் சேர்ந்த புவோங் தாவ் லியை 144-140 எனும் புள்ளிக் கணக்கில் லோ நேற்று வென்றார்.
2013ல் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கடைசியாக சிங்கப்பூர் தங்கம் வென்றிருந்தது.
இந்நிலையில், அம்பு எய்தல் போட்டியில் மற்றொரு சிங்கப்பூர் வீரர் வெண்கலப் பதக்கம் வென்றார். வியட்னாமின் நுவென் தி ஹாய் சாவுக்கு எதிரான ஆட்டத்தில் 146-140 எனும் புள்ளிக் கணக்கில் மெடலின் ஓங் வென்றார்.
கடைசியாக 2019ல் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் அம்பு எய்தல் விளையாட்டில் சிங்கப்பூர் பதக்கம் எதையும் வெல்லவில்லை. 2017 போட்டிகளில் அது வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றிருந்தது.

