செம்பனை எண்ணெய்: உள்நாட்டுக் கையிருப்பிற்கு உறுதி

1 mins read
31ef1823-47d0-4f9d-930b-24128285cd74
-

ஜகார்த்தா: செம்­பனை எண்­ணெய் ஏற்­று­ம­திக்­கான தடையை இந்­தோ­னீ­சியா நாளை முதல் நீக்­கி­யுள்ள நிலை­யில், உள்­நாட்­டில் எண்­ணெய் கையி­ருப்பு தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் கொண்டு வரப்­படும் என்று அந்­நாட்­டின் பொரு­ளா­தார அமைச்­சர் கூறி­யுள்­ளார்.

உள்­நாட்­டில் எண்­ணெய் விலை உயர்­வைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில், கடந்த ஏப்­ரல் மாதம் 28ஆம் தேதி முதல் செம்பனை எண்ணெய் ஏற்­று­மதிக்கு இந்­தோ­னீ­சியா தடை விதித்­தது.

ஆனால், இந்த தடை உத்­த­ர­வால் உள்­நாட்­டில் எண்­ணெய் விலை குறைந்­த­பா­டில்லை. இதற்­கி­டையே நடந்த விவ­சா­யி­கள் ஆர்ப்­பாட்­டத்­தைத் தொடர்ந்து, தடை உத்­த­ரவு நீக்­கப்­பட்­டு உள்ளது.

10 மில்­லி­யன் டன் செம்­பனை எண்­ணெய் உள்­நாட்­டில் கையி­ருப்பு உள்­ளதை உறுதி செய்­வ­தற்­கான உள்­நாட்டு சந்­தைப் பொறுப்பு என்ற நடை­முறை நடப்­புக்கு வரும் என்று பொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளின் ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் சொன்­னார்.

எண்­ணெய் கையி­ருப்பு தொடர்­பில் ஒவ்­வொரு உற்­பத்­தி­யா­ள­ரின் பங்கு எவ்­வ­ளவு என்­பது குறித்து வர்த்­தக அமைச்சு முடிவு செய்­யும் என்­றும் அவர் சொன்­னார்.