நியூயார்க்: குரங்கம்மை காரணமாக உடலில் சொறி ஏற்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலோ அல்லது அவருடன் பாலியல் உறவு கொண்டாலோ
அந்நோய் பரவக்கூடும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நோய் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது. பொதுவாக ஆப்பிரிக்காவில் குரங்கம்மை பாதிப்பு அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
ஆனால் அமெரிக்காவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருப்ப
வருக்கும் ஆப்பிரிக்காவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது அமெரிக்க அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுமக்களிடையே குரங்கம்மை பரவும் அபாயம் மிகக் குறைவாக இருக்கும்போதிலும் விழிப்புடன் இருக்கும்படி சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகம் எழுந்தாலோ அல்லது தேவை ஏற்பட்டாலோ மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக முழுப் பாதுகாப்பு ஆடைகளை
அணிந்துகொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஒருவருடன் படுக்கை, பல்துலக்க பயன்படுத்தப்படும் தூரிகை, ஆடைகள் போன்றவற்றை பகிர்ந்துகொண்டால் நோய் பரவும் அபாயம் அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைய நாள்களில் ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய இடங்களில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் ஓரே பாலினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆடவர்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகெங்கும் பதினோரு நாடுகளில் கிட்டத்தட்ட 80 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உண்டாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் இன்னும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒரு குரங்கம்மை சம்பவம் உறுதிசெய்யப்
பட்டுள்ளது.
இத்தாலியில் மூன்று பேருக்கும் ஸ்பெனில் ஏழு பேருக்கும் பிரிட்டனில் 20 பேருக்கும் குரங்கம்மை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேலும் பலருக்கு குரங்கம்மை பரவக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், உலகெங்கும் சுகாதாரத் துறையினர் விழிப்புடன் செயல்பட்டு வரு கின்றனர்.