சட்டவிரோதமாக மீன்பிடிப்பதைக் கண்காணிக்க ஏற்பாடு

சட்டவிரோதமாக மீன்பிடிப்பதைக் கண்காணிக்க ஏற்பாடு

1 mins read
e1b25e18-8599-4679-beee-2ad6b0b1841a
-

அமெ­ரிக்கா, ஜப்­பான், ஆஸ்­தி­ர­லியா, இந்­தியா ஆகிய நான்கு நாடு­களும் தோக்­கி­யோ­வில் நடக்­கும் குவாட் அமைப்பு கூட்­டத்­தின்­போது கடல் கண்­காணிப்­பு ஏற்­பாடு பற்றி அறி­விக்­கும்.

இந்தோ-பசி­பிக் கடல் பகுதியில் சட்­ட­வி­ரோ­த­மாக மீன்பிடிப்பதைத் தடுக்க இந்­தக் கண்­காணிப்பு முறை பயன்­ப­டுத்­தப்­படும் என்று அமெ­ரிக்க அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தாக ஃபைனான்­ஷி­யல் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.

அந்த ஏற்­பாடு, சிங்­கப்­பூ­ரி­லும் இந்­தி­யா­வி­லும் உள்ள கண்­காணிப்பு நிலை­யங்­க­ளு­டன் இணைப்பை ஏற்­ப­டுத்தி இந்­தி­யப் பெருங்­க­டல் பகு­தி­யில் இருந்து தென் பசி­பிக் கடல்­வ­ரைப்­பட்ட பகுதி­யில் சட்ட விரோ­த­மாக மீன் பிடிக்­கப்­ப­டு­வ­தைக் கண்­கா­ணிக்­கும். இதற்கு அது துணைக் கோள தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தும்.

ஆஸ்­தி­ரே­லியா, இந்­தியா, ஜப்­பான், அமெ­ரிக்கா ஆகிய நாடு­கள் அங்­கம் வகிக்­கும் குவாட் குழு­மத்­தின் கூட்­டம் தோக்­கி­யோ­வில் நடைபெறுகிறது.

அதில் அமெ­ரிக்க அதி­பர் பைடன், இந்­தி­யப் பிர­த­மர் மோடி, ஆஸ்­தி­ரே­லி­யா­வின் புதிய பிர­த­மர், ஜப்­பானியப் பிர­த­மர் ஆகி­யோர் கலந்து­கொள்­கி­றார்­கள். சீனா­வின் கெடு­பிடி போக்கு அதி­க­ரித்து வரும் நிலை­யில், இந்த நாடு­கள் தங்­க­ளுக்கு இடை­யில் ஒத்­து­ழைப்பை அதி­கப்­ப­டுத்தி இருக்­கின்­றன.

அமெ­ரிக்­கா­வில் சட்­ட­வி­ரோ­த­மாக மீன் பிடிக்­கப்­படும் பிரச்­சினைக்­குத் தீர்வுகாணும் திட்­டங்­கள் பற்றி அமெ­ரிக்கா விரை­வில் அறி­விக்­கும் என்று இந்த மாத தொடக்­கத்­தில் அமெ­ரிக்கா-இந்தோ-பசி­பிக் ஒருங் கிணைப்பாளரான குர்ட் கேம்ப்­பெல் கூறியிருந்­தார்.

இந்தோ பசி­பிக் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த பல நாடு­கள் சீனா­வின் மீன்­பிடி கலன்­க­ளால் தங்­க­ளுக்கு பல தொல்­லை­கள் ஏற்­ப­டு­வ­தாக கூறி வரு­கின்­றன.