ஜோகூரில் வாடகை அறைகளுக்கு தேவை அதிகரிப்பு

ஜோகூரில் வாடகை அறைகளுக்கு தேவை அதிகரிப்பு

1 mins read
e8e8739c-3954-45fd-afcc-d67bb06a75d7
-

ஜோகூர் பாரு: சிங்­கப்­பூர், மலே­சிய எல்­லை­கள் திறக்­கப்­பட்டு கிட்­டத்­தட்ட இரண்டு மாதங்­கள் ஆகி­யுள்ள நிலை­யில், ஜோகூர் பாரு­வில் வாடகை அறை­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ள­தாக மலே­சி­யா­வின் 'த ஸ்டார்' செய்­தித் தக­வல் கூறு­கிறது.

ஏப்­ரல் 1ஆம் தேதி எல்­லை­கள் திறந்­து­வி­டப்­பட்ட பின் தமக்கு வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து தங்குவதற்கு அறை­கள் தேவை என்ற கோரிக்கை அதி­க­மாக வந்­துள்­ள­தாக பல நிலச் சொத்­து­களுக்கு உரி­மை­யா­ள­ரான திரு லிம் சி யான், 40, கூறு­கி­றார்.

"இவை யாவும் சிங்­கப்­பூ­ரில் வேலை­பார்த்து தின­சரி மலே­சி யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடையே பய­ணம் மேற்­கொள்­ளும் மலே­சி­யர்­க­ளி­ட­மி­ருந்து வரு­கிறது.

"என்­னி­டம் இருக்­கும் 100 அறை­களில் தற்­பொ­ழுது கைவசம் நான்கு மட்­டுமே வாட­கைக்கு விடும் நிலை­யில் உள்­ளது," என்று இவர் கூறு­கி­றார்.

இதில் அதி­கம் நாடப்­ ப­டு­வது ஜோகூர் பாரு நகர மையத்­தில் உள்ள தாமான் சென்­சுரி, தாமான் பெலாங்கி, தாமான் செந்­தோசா ஆகிய இடங்­கள் என்­றும் இவர் விளக்­கி­னார்.

அத்­து­டன், வீட்டு வாட­கை­யும் உயர்ந்து கொள்­ளை­நோய்க்கு முந்­திய நிலைக்கு திரும்­பி­யுள்ளதாக திரு லிம் தெரி­விக்­கி­றார்.

"கொள்­ளை­நோய் காலத்­தில் உள்­ளூர் வாடிக்­கை­யா­ளர்க்கு மட்­டுமே அறை­கள் விடப்­பட்­ட­தால் வாட­கையை பாதி­யா­கக் குறைக்க வேண்­டி­யி­ருந்­தது," என்று திரு லிம் சொன்­னார்.