இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசாங்கம் இன்னும் ஆறு நாள்களுக்குள் புதிய பொதுத் தேர்தலை அறிவிக்காவிட்டால் அங்கு மேலும் பல பெரும் ஆர்ப்பாட்டங்கள் நிகழும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்திருக்கிறார்.
திரு கானும் அவரது ஆதர வாளர்கள் பல்லாயிரம் பேரும் கடந்த புதன்கிழமை தலைநகர் இஸ்லாபாத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்கள் பேரணியாகச் சென்று இஸ்லாமாபாத் அடை வதைத் தடுக்க, நகரத்துக்குள் செல்லும் சாலைகளை அரசாங்கம் மூடியது. ஆனால் அவசரமாகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் திரு கானும் அவரது ஆதரவாளர்களும் தலைநகருக்குள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தந்தது.
நேற்று அதிகாலை தமது ஆதர வாளர்களிடம் பேசிய திரு கான், ஜூன் மாதத்தில் புதிய தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு ஆறு நாள் கெடு விதித்தார். பிறகு தமது ஆதரவாளர்களைக் கலைந்து செல்ல சொன்னார்.
திரு கான்மீது கொண்டு வரப் பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத் துக்கு ஆதரவாக பாகிஸ்தான் நாடாளுமன்றம் வாக்களித்ததை அடுத்து அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.