குரங்கம்மை தொற்று 200ஐ தாண்டியது

குரங்கம்மை தொற்று 200ஐ தாண்டியது

1 mins read
63c1e4f3-eaa9-4fbd-ad5e-20978d01284b
-

ஸ்டாக்ஹோல்ம்: குரங்­கம்மை வழக்­க­மா­கக் காணப்­படாத நாடு­களில், அதன் தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 200ஐத் தாண்­டி­யுள்­ளது. ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் நோய்த் தடுப்­புக் கட்­டுப்­பாட்டு நிலை­யம் இதைத் தெரி­வித்­தது.

கடந்த ஒரு வாரத்­தில் ஒட்­டு­மொத்­தத் தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை ஐந்து மடங்கு கூடி­யுள்­ளது. கடந்த மே 20ஆம் தேதி ஒட்­டு­மொத்த குரங்­கம்­மைத் தொற்று எண்­ணிக்­கையை எண்­ணத் தொடங்­கி­ய­போது 38 சம்­ப­வங்­கள் பதி­வாகி இருந்­தன. தற்­போது மொத்­தம் 219 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி உள்­ளன.

குரங்கம்மை வழக்க மாக தொற்றாத 13க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றில் பெரும் பாலானவை ஐரோப்பிய நாடுகள் ஆகும்.

மேற்கு அல்லது மத்திய ஆப்ரிக்க நாடு களுடன் தொடர்புபடுத்த முடியாத தொற்று ஐரோப்பாவில் பரவி இருப்பது இதுவே முதல் முறை என்று நோய்த் தடுப்புக் கட்டுப்பாட்டு நிலையம் கூறியது.

தொற்றுக்கு ஆளான வர்கள் பெரும்பாலும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் இளம் ஆடவர்கள் என்று நிலையம் குறிப்பி ட்டது. குரங்கம்மை நோய் பாதிப்பு மிதமாக உள்ளது என்றும் இதுவரை மரணங் கள் நிகழவில்லை என்றும் நிலையம் கூறியது.

புதிய தொற்றுச் சம்பவங்கள் முதலில் பதிவான பிரிட்ட னில்தான் ஆக அதிகமான எண்ணிக்கை உள்ளது. அங்கு 71 பேருக்கு தொற்று உள்ளது.