துப்பாக்கிச்சூட்டில் மாண்ட காதல் மனைவி; துக்கம் தாளாத ஆடவர் மாரடைப்பால் மரணம்

துப்பாக்கிச்சூட்டில் மாண்ட காதல் மனைவி; துக்கம் தாளாத ஆடவர் மாரடைப்பால் மரணம்

1 mins read
505228e8-23fd-4673-b436-1865877159f1
மனைவி இர்மா கார்சியாவுடன் ஜோ கார்சியா. படம்: கோஃபண்ட்மீ -

டெக்­சஸ்: அமெ­ரிக்­கா­வின் டெக்­சஸ் பள்­ளி­யில் நடந்த கொடூர துப்­பாக்­கிச்­சூட்டு சம்­பவத்­தில் தமது மனைவி இழந்த துக்­கத்­தில் தவித்த ஆட­வர் மார­டைப்­பால் மாண்­டார்.

தம்­மு­டைய மனைவி இர்மா கார்­சி­யா­வின் இறு­திச் சடங்­குக்­கான ஆயத்­தப் பணி­கள் செய்­து­கொண்­டி­ருந்­த­போது ஜோ கார்­சியா திடீ­ரென்று மயங்கி விழுந்து உயி­ரி­ழந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

திரு­ம­ண­மாகி 24 ஆண்­டு­கள் ஆகும் இத்­தம்­ப­திக்கு மூன்று பிள்­ளை­கள் உள்­ள­னர்.

"அவர் தமது மனை­வியை மிக­வும் காத­லித்­தார். மனைவி பிரிந்த துக்­கம் தாளா­மல் அவர் உயிர்ப் பிரிந்­தது என்று நாங்­கள் எண்­ணு­கி­றோம்," என அவ­ரது நெருங்­கிய உற­வி­னர்­கள் கூறி­னர்.

டெக்­ச­ஸின் உவால்டி நக­ரில் உள்ள ரோப் தொடக்­கப் பள்­ளியில் நேற்று முன்தினம் நடந்த துப்­பாக்­கிச் சூட்டு சம்­ப­வத்­தின்­போது, பிள்­ளை­க­ளைப் பாது­காக்க முயன்­ற­போது இர்மா கார்­சி­யா­வும் மற்­றொரு ஆசி­ரி­ய­ரும் மாண்­ட­னர். 19 பள்­ளிக் குழந்­தை­களும் இந்த துப்­பாக்­கிச் சூட்டு சம்­ப­வத்­தில் கொல்­லப்­பட்­ட­னர்.