ஷாங்காய்: ஷாங்காயில் இரண்டு மாதங்களாக நீடித்த முடக்கநிலை கிட்டத்தட்ட தளர்த்தப்பட்டுவிட்டது. அதேசமயம் கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்திருந்தாலும் பெய்ஜிங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
ஜூன் 1ஆம் தேதி முதல் ஷாங்காயில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவுள்ளன. அதிகமானோர் தங்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல வர்த்தகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.
இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பொது இடங்களில் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சாலையில் மகிழ்ச்சியாக பாடித் திரிந்த குழுவினரை போலிசார் வீட்டிற்குத் திரும்பக் கூறும் காணொளிகள் இணையத்தில் வலம் வருகின்றன.

