தோக்கியோ: ஜப்பானிய செம்படையின் நிறுவனரான 76 வயது ஃபுசாகோ ஷிகெனோபு தமது 20 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு நேற்று விடுதலையானார்.
1972ஆம் ஆண்டு டெல் அவிவின் லாட் விமான நிலையத்தில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு ஃபுசாகோ மூளையாக செயல்பட்டார் என்றும் நம்பப்படுகிறது. 1974ல் நெதர்லாந்தில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தை செம்படையினர் மூவர் முற்றுகையிட்டது தொடர்பில் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர்கள், தூதரக அதிகாரிகளை 100 மணி நேரம் பிணை கைதியாக வைத்திருந்தனர்.

