கமலா ஹாரிஸ்: துப்பாக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கவேண்டும்

கமலா ஹாரிஸ்: துப்பாக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கவேண்டும்

1 mins read
4b853749-5820-4044-ad99-38556b9e7453
துப்பாக்கிச்சூட்டில் மாண்ட பிள்ளைகளுக்கு உவால்டி நகரின் டவுன் சதுக்கத்தில் மக்கள் அஞ்சலி செலத்தினர்.படம்: ராய்ட்டர்ஸ் -

வா‌ஷிங்­டன்: உயி­ரைப் பறிக்­கும் துப்­பாக்­கிப் போன்ற ஆயு­தங்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­ப­ட­வேண்­டும் என்று அமெ­ரிக்க துணை அதி­பர் கமலா ஹாரிஸ் கூறி­யுள்­ளார்.

அமெ­ரிக்­கா­வில் அண்­மை­யில் நடந்த பள்­ளிக்­கூ­டம், பேரங்காடி என இரண்டு இடங்­களில் நடந்த துப்­பாக்­கிச்­சூட்­டுச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து அவர் இத­னைத் தெரி­வித்­துள்­ளார்.

மே 14ஆம் தேதி நடந்த பேரங்­காடி துப்­பாக்­கிச்­சூட்­டில் மாண்ட 86 வயது நப­ரின் இறு­திச் சடங்­கில் கமலா ஹாரிஸ் கலந்­து­கொண்­டார். இந்த அதிர்ச்­சி­யில் இருந்து மீள்­வ­தற்­குள், அடுத்த பத்து நாள்­களில் டெக்­சஸ் தொடக்­கப் பள்ளி ஒன்­றில் நடந்த துப்­பாக்­கிச்­சூட்டு சம்­ப­வத்­தில் 19 பிள்­ளை­கள் உட்­பட 21 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

"இது­வரை பொறு­மை­யாக இருந்­தது போதும். துப்­பாக்­கிக் கலா­சா­ரத்­திற்கு முடிவு கட்ட வேண்­டிய நேரம் இது.

"நம் நாட்­டில் இது­போன்ற சம்­ப­வங்­கள் இனி நடக்­கக்­கூ­டாது. அதற்கு தேவை­யா­னதை செய்ய நாம் அனை­வ­ரும் ஒன்­று­சேர வேண்­டும்," என்­றார்.

ஆனால், குடி­ய­ர­சுக் கட்­சி­யின் டிரம்ப்போ, "துப்­பாக்­கி­க­ளைத் தடை செய்­வது இது­போன்ற சம்­ப­வங்­க­ளுக்­குத் தீர்­வா­காது. துப்­பாக்கி இல்­லை­யென்­றால் நல்­ல­வர்­கள் எப்­படி தீய­வர்­க­ளி­டம் இருந்து தங்­க­ளைப் பாது­காத்து கொள்­வார்­கள். எனவே, பள்­ளிக்­கூ­டங்­களில் பாது­காப்­பைப் பலப்­ப­டுத்த வேண்­டும்," என்­கி­றார்.