ஹாங்காங்: பயணக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்த தொடங்கியுள்ள ஹாங்காங், அங்கு செல்லும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டாய கொவிட்-19 பரிசோதனையில் தளர்வை அறிவித்துள்ளது.
ஹாங்காங் புறப்படுவதற்கு
48 மணி நேரத்திற்கு முன்பு கொவிட்-19 பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை தொடர்ந்து நடப்பில் உள்ளது என்றாலும் தொற்று இல்லை என்பதற்கான ஆய்வகச் சான்றிதழ் அவசியம் இல்லை என்று ஹாங்காங் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஹாங்காங் வழியாக செல்லும் பயணிகள் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் வரும் 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும்.
சீனாவைத் தவிர பெரும்பாலான உலக நாடுகள் தனது அனைத்துலக எல்லையைத் திறந்து வரும் வேளையில், கிருமித்தொற்றைத் துடைத்தொழிக்கும் கொள்கையைப் பின்பற்றுவதில் உறுதியாக இருந்த ஹாங்காங், கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையிலும் இந்தத் தளர்வுகளைக் கொண்டு வந்துள்ளது.

