பியோங்யாங்: தலைநகர் பியோங்யாங்கில் இரு வாரங்களுக்கும் மேலாக நடப்பில் இருந்து வந்த கொவிட்-19 முடக்கநிலையை வடகொரியா நீக்கியுள்ளதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த மாதம் 12ஆம் தேதிக்குப் பிறகு பியோங்யாங்கில் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வர்த்தக நடவடிக்கைகள் மெதுவாக மீண்டும் தொடங்கியுள்ளதாக என்கே நியூஸ் செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் தெரிவித்தது.