ஆண்டிறுதிக்குள் 52,000 வெளிநாட்டு ஊழியர்களை எதிர்பார்க்கும் மலேசிய செம்பனை எண்ணெய்ச் சங்கம்

ஆண்டிறுதிக்குள் 52,000 வெளிநாட்டு ஊழியர்களை எதிர்பார்க்கும் மலேசிய செம்பனை எண்ணெய்ச் சங்கம்

2 mins read
942d0972-acb6-4758-82cf-63699140c35f
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வுக்கு ஆண்­டி­று­திக்­குள் ஏறக்­கு­றைய 52,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வரு­வார்­கள் என மலே­சிய செம்­பனை எண்­ணெய்ச் சங்­கம் எதிர்­பார்க்­கிறது. ஆனால், செம்­பனை எண்­ணெய் உற்­பத்­தி­யில் உல­கின் இரண்­டா­வது பெரிய நாடாக விளங்­கும் மலே­சி­யா­வில் எண்­ணெய் உற்­பத்தி மீட்­சி­ய­டைய இது போதாது என சங்­கம் எச்­ச­ரித்­து உள்­ளது.

கொவிட்-19 பெருந்­தொற்­றுச் சூழ­லில் எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக ஊழி­யர் பற்­றாக்­குறை மோச­ம­டைந்­தது. இத­னால் செம்­பனைத் தோட்­டங்­கள் செம்­பனை பழத்தை அறு­வடை செய்ய சிர­மப்­ப­டு­கின்­றன.

மலே­சி­யத் தோட்ட ஊழி­ய­ர­ணி­யில் ஏறக்­கு­றைய 80 விழுக்­காட்­டி­னர் வெளி­நாட்டு ஊழி­யர்­கள். அவர்­களில் பெரும்­பா­லா­னோர் இந்­தோ­னீ­சி­யர்­கள்.

ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யால் மலே­சி­யா­வில் செம்­பனை எண்­ணெய் உற்­பத்தி பல ஆண்­டு­களில் காணப்­ப­டாத அள­வுக்கு குறைந்­து உள்­ளது.

செம்­பனை எண்­ணெய்யை உற்­பத்தி செய்­யும் ஆகப்­பெ­ரிய நாடான இந்­தோ­னீ­சியா ஏற்­று­ம­திக்குக் கட்டுப்­பாடு விதித்­துள்­ள­தா­லும் ரஷ்யா-உக்­ரேன் போரா­லும் சமை­யல் எண்­ணெய் பற்­றாக்­கு­றையை உல­கம் எதிர்­நோக்­கு­கிறது.

2020ல் எல்­லை­கள் மூடப்­ப­டு­வதற்கு முன்பு 20,000 ஊழி­யர்­கள் மலே­சியா வரு­வ­தற்கு அர­சாங்­கம் அனு­மதி அளித்­தி­ருந்­த­தாக மலே­சிய செம்­பனை எண்­ணெய் சங்­கத் தலைமை நிர்­வாகி நஜிப் வஹாப் தெரி­வித்­தார். அது­போக, ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யைப் போக்க 32,000 ஊழி­யர்­க­ளின் வரு­கைக்­கும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களில் பலர் மலே­சி­யா­வுக்கு வந்த வண்­ணம் உள்­ள­னர்.

"நாங்­கள் ஏற்­கெ­னவே சிர­ம­மான நிலை­யில் இருந்து வரு­கி­றோம்," என்று கூறிய திரு நஜிப், தற்­போ­தைய ஊழி­யர் பற்­றாக்­குறை 100,000க்கும் மேல் இருக்­க­லாம் என்­றார்.

ஜூலைக்­குள் பெரிய எண்­ணிக்­கை­யி­லா­னோர் மலே­சி­யா­வுக்கு வரு­வர் என அவர் உறு­தியாகக் கூறி­னார்.

2020 ஏப்­ர­லில் செம்­பனை எண்­ணெய்த் துறை­யில் 337,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வேலை செய்­த­னர்.

ஆனால், கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக பல­ரும் தாய­கம் திரும்­பி­னர். எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்­த­தால் மலே­சியா வர­வும் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

கொவிட்-19 சூழல் கட்­டுக்­குள் வந்­துள்­ள­தைத் தொடர்ந்து, கடந்த மாதம் மலே­சியா எல்­லை­களை மீண்­டும் திறந்­தது.