முன்னெப்போதும் இல்லாத அளவாக 2021ல் ஒரு பில்லியன் போதை மாத்திரைகள் பறிமுதல்

முன்னெப்போதும் இல்லாத அளவாக 2021ல் ஒரு பில்லியன் போதை மாத்திரைகள் பறிமுதல்

1 mins read
7301630c-2bc9-4552-a4e5-85895bccab33
-

பேங்­காக்: கிழக்கு, தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் கடந்த ஆண்டு சாதனை அள­வாக ஒரு பில்­லி­யன் 'மெத்­தாம்­பேட்­ட­மைன்' மாத்­தி­ரை­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் தெரி­வித்துள்­ளது. அவற்­றைக் கடத்­தும் கும்­பல்­கள், கொவிட்-19 பெருந்­தொற்­றுச் சூழ­லை­யும் ஆட்­சிக்­க­விழ்ப்­பால் மியன்­மா­ரில் ஏற்­பட்ட அர­சி­யல் நில­வ­ரத்­தை­யும் தங்­க­ளுக்குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி போதைப்­பொ­ருள் கடத்­தலை தீவிரப்­ப­டுத்­தின.

தென்­கி­ழக்­கா­சி­யா­வில் 'தங்க முக்­கோ­ணம்' நீண்­ட­கா­ல­மா­கவே போதைப்­பொ­ருள் கடத்­த­லுக்கு பெயர்­போ­ன­தாக விளங்கி வந்­து உள்­ளது. மியன்­மார், லாவோஸ், தாய்­லாந்து ஆகிய நாடு­களில் காவல்­துறை கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­கள் கடு­மை­யாக இல்­லா­த­தால், அந்த நாடு­க­ளின் எல்­லை­கள் வழி­யாக சட்­ட­வி­ரோத பொருள்­கள் எளி­தில் கடத்­தப்­ப­டு­கின்­றன.

சட்ட அம­லாக்­கத்­துறை கிட்­டத்­தட்ட 172 டன் போதை மாத்­திரை­களைப் பறி­மு­தல் செய்­த­தாக ஐ.நா. போதைப்­பொ­ருள், குற்­றச்­செ­யல் அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.