ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தெற்கு சுலாவேசி மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை படகு மூழ்கிய விபத்தில் 31 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் 11 பேரை இன்னும் காணவில்லை என்றும் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
மீட்கப்பட்டவர்கள் வீடு திரும்பிவிட்டதாகவும் அவர்கள் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாகவும் அவர் சொன்னார்.
மகசார் நீரிணையில் சென்றுகொண்டிருந்த அந்தப் படகில் எரிபொருள் தீர்ந்துவிட்டதைத் தொடர்ந்து, மோசமான வானிலை காரணமாக அது மூழ்கியது. உள்ளூர் மீனவர்கள் பலர், படகில் மூழ்கியவர்களை இழுவைப் படகுகளில் மீட்டனர்.

