காட்மாண்டு: நேப்பாளத்தில் கடந்த ஞாயிறன்று பொக்கரா என்ற நகரிலிருந்து கிளம்பிய விமானம் பின்னர் 15 நிமிடங்கள் கழித்து விபத்துக்குள்ளானது. இதிலிருந்த அனைவரும் மாண்ட நிலையில், பயணம் செய்த அனைவரின் உடல்களையும் மீட்புக் குழுவினர் கண்டெடுத்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது. அத்துடன், அந்த விமானத்தின் குரல் பதிவு இயந்திரமும் மீட்கப்பட்டுவிட்டதாக தெரியவந்துள்ளது, 'டி ஹாவிலாண்ட் கனடா டிஹெச்சி 6-300' ரக விமானமான அது நேப்பாளத் தலைநகர் காட்மாண்டுவிலிருந்து 125 கிலோமீட்டர் மேற்கே உள்ள பொக்கரா என்ற நகரி
லிருந்து கிளம்பிய 15 நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
அந்த விமானம் உல்லாசப் பயணம் மேள்கொள்பவர்களும் புனித யாத்திரை மேற்கொள்பவர்களும் விரும்பிப் போகும் ஜோம்சம் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
விபத்து நடந்த இடத்தில் சிதறிய விமான பாகங்கள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

