ஈப்போ: மலேசியாவில் 15 மனித உடல் துண்டுகள் கழிவுநீர்த் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டன. இதன் தொடர்பில் 42 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சொத்து தகராறு குறித்து தன்னுடைய தாயை சந்தேக நபர் கொன்று பல துண்டுகளாக வெட்டியதாகக் காவல்துறை தெரிவித்தது.
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் இந்தக் கோரச் சம்பவம் நிகழ்ந்தது. நேற்று முன்தினம் சம்பவம் குறித்து காவல் துறைக்கு மாலையில் அழைப்பு வந்தது. சோதனை நடத்தியபோது, உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பிரேதப் பரிசோதனையில் உடல் பாகங்கள் ஒரு 68 வயது மாதுக்குச் சொந்தமானவை என்று தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மாதின் மகன் கைதுசெய்யப்பட்டார். ஓர் அரிவாள், இரண்டு கத்திகள், கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மற்ற பொருள்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
தனது தந்தை தனக்கு விட்டுச்சென்ற சொத்து குறித்து சந்தேக நபருக்குத் திருப்தி இல்லாததால், அவர் தாயைக் கொன்றதாக அதிகாரிகள் கூறினர்.