மயாமி: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் ஓர் இரண்டு வயது பிள்ளை தனது தந்தையைத் தவறுதலாகச் சுட்டுக்கொன்றார். தோட்டாக்கள் இருந்த துப்பாக்கியை பிள்ளையின் பெற்றோர் கவனிப்பின்றி விட்டுச் சென்றதால் அச்சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் வந்த பிறகு அவர்கள் ஒர்லாண்டோ நகருக்கு அருகே உள்ள வீட்டிற்குச் சென்றனர். அப்போது பிள்ளையின் தாயான மரீ அயாலா தனது கணவருக்கு சுய நினைவைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார்.
பிள்ளையின் தந்தையான 26 வயது ரெஜி மாப்ரி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஏற்கெனவே சில குற்றங்களைப் புரிந்த பிள்ளையின் பெற்றோர் நிபந்தனைகளுடன் தற்காலிகமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள். குற்றவாளியாக இருந்தபோதே துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அயாலா தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

