ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் மீண்டும் ஒரே நேரத்தில் பலருக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது. ஏறத்தாழ 25 மில்லியன் ஷாங்காய்வாசிகளுக்கு நேற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
ஷாங்காயில் உள்ள பிரபல அழகு நிலையம் ஒன்றுக்குச் சென்ற சிலருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதை அடுத்து கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர அந்நகரத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
ஷாங்காயில் உள்ள பெரும்பாலான வட்டாரங்களில் மக்களுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பரிசோதனை நடத்தப்படும்போது மக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என சில வட்டாரங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த மிகக் கடுமையான முடக்கிநிலை முடிவுக்கு வந்து வெறும் பத்து நாள்களில் ஷாங்காயில் மீண்டும் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் 16 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக ஷாங்காய் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
அவர்களில் ஆறு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட்டாரங்
களுக்கு வெளியே வசிப்பவர்கள்.
இதற்கிடையே, தலைநகர் பெய்ஜிங்கில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது.
மேலும் 61 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக பெய்ஜிங்கின் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

