ஒட்டாவா: ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகத்தைப் பதிவு செய்ய கனடா நாட்டின் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
கனடா மக்கள்தொகையில் 13 விழுக்காட்டினர் நாள்தோறும் புகைபிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்நாட்டு மக்களுக்குப் புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைக்கும் வண்ணம் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
"புகையிலை தொடர்பான பொருள்களில் தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கைகள் மிக முக்கியமான தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்க உதவும்.
புகைபிடிக்க முற்படும் இளைஞர்கள், சிகரெட் பொட்டலங்களில் உள்ள எச்சரிக்கை வாசகங்களைப் புறக்கணிக்கின்றனர்.
அதற்கு மாறாக சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்கள் இருந்தால் அவை அவர்களின் கண்களிலிருந்து தப்பாது.
"இந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். 2023ஆம் ஆண்டிலிருந்து புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என அரசு எதிர்பார்க்கிறது," என்று மனநலம், போதைக்கு அடிமையாதலைத் தடுக்கும் துறைக்கான அமைச்சர் கரோலைன் பென்னட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.