அத்துமீறலைத் தட்டிக்கேட்ட பெண்கள் மீது கடுமையான தாக்குதல்: எட்டு பேர் கைது

அத்துமீறலைத் தட்டிக்கேட்ட பெண்கள் மீது கடுமையான தாக்குதல்: எட்டு பேர் கைது

1 mins read
c5cbc4b7-1146-4f85-9223-fcbcd9e61d3c
-

பெய்­ஜிங்: சீனா­வின் ஹெபெய் மாநி­லத்­தில் உள்ள உண­வ­கம் ஒன்­றில் உண­வ­ருந்­திக்­கொண்­டி­ருந்த பெண்ணை ஆட­வர் ஒரு­வர் தகாத முறை­யில் தொட்­டார்.

ஆத்­தி­ரம் அடைந்த அப்­பெண் அந்த ஆட­வ­ரைத் தள்­ளி­விட்­டார்.

இத­னை­ய­டுத்து, அந்த ஆட­வ­ரின் நண்­பர்­கள் அப்­பெண்ணை தர­த­ர­வென வெளியே இழுத்­துச் சென்று சர­மா­ரியா­கத் தாக்­கி­னர்.

அப்­பெண்­ணு­டன் இருந்த இன்­னொரு பெண்­ணும் தாக்­கப்­பட்­டார்.

அப்­பெண்­களை அங்­கி­ருந்­த­வர்­கள் மீட்டு அரு­கில் இருந்த மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­தித்­த­னர். கண்­கா­ணிப்பு கேம­ரா­வில் தாக்­கு­தல் பதி­வா­னது. அந்­தக் காணொளி சமூக வலைத்­

த­ளங்­களில் தீயைப் போல் மிக வேக­மா­கப் பர­வி­யது. அத­னைத் தொடர்ந்து சீனக் காவல்துறை அதி­கா­ரி­கள் வழக்கு பதிவு செய்து எட்டு பேரைக் கைது செய்­துள்­ள­னர். இந்­தத் தாக்­கு­தல் குறித்து விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது. இந்­தச் சம்­ப­வத்­தைத் தொடர்ந்து பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைச் செயல்­க­ளுக்கு எதி­ராக அதி­ருப்­திக் குரல்­கள் எழுந்­துள்­ளன.