சோல்: தென் கொரியாவில் அரசாங்கத்துடன் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஆறாவது நாளாக நேற்று கனரக லாரி ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தது.
அதிக சம்பளம் கேட்டு கனரக லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டின் தொழில்துறை மற்றும் துறைமுகங்கள் முடங்கியுள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய கனரக லாரி ஓட்டுநர் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர், பேச்சுவார்த்தை தொடருமா என்பது தெரியவில்லை என்றார். ஆனால் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அர சாங்கத் தரப்பில் தெரிவிக்கப் பட்டாலும் அது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
புசான் வட்டாரச் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக உள்ளூர் தலைவர்கள் இன்று (ஞாயிறு) ஒன்று கூடுகின்றனர் என்று தெரிவித்தார்.
பகுதிமின்கடத்தி (semi conductor), திறன்பேசி, மின்கலம், மின்னியல் பொருள்கள் உள்ளிட்டவற்றை உலக முழுவதும் விநியோகிக்கும் முக்கிய நாடாக தென் கொரியா இருந்து வருகிறது. சீனாவின் கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகளாலும் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பாலும் ஏற்கெனவே இடையூறுகள் ஏற்பட்டுள்ள உலகளாவிய விநியோகச் சங்கிலிகள், இந்த வேலை நிறுத்தத்தால் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளன. உலகம் முழுவதும் உள்ள துறைமுகங்களில் கணினிச் சில்லுகள், பெட்ரோலிய ரசாயனம், வாகனங்களின் விநியோகம் மெதுவடைந்துள்ளது. இதனால் ஆசியாவின் ஆகப்பெரிய நான்காவது பொருளியல் நாடான தென் கொரியாவின் ஏற்று மதிக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரித்து வருவதற்கு எதிராகவும் குைறந்தபட்ச உத்தரவாதமுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் டிரக் ஒட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெற்கு நகரமான உல்சானில் உள்ள ஹுயுண்டாய் வாகன தொழிற்சாலைக்கு முன்பு நேற்று திரண்ட 100க்கும் மேற்பட்ட கனரக லாரி ஓட்டுநர்கள் அரசாங்கத்துக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இந்த நிலையில் இன்று மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று சங்கத்தின் அதிகாரி நேற்று கூறினார்.

