கேன்பரா: ஆஸ்திரேலியாவுக்கு மே மாதம் மிக மோசமான மாதமாக அமைந்துள்ளது. அந்த மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானோர் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
ஆஸ்திரேலியா முழுவதும் மே மாதத்தில் மொத்தம் 65,770 பேர் சளிக்காய்ச்சலால் பாதிக்கப் பட்டதாக தேசிய நோய்க் கண் காணிப்பு முறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 5ஆம் தேதி வரை கணக்கில் எடுத்துக் கொண்டால் 87,989 பேருக்கு சளிக்காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 47,860 பேர், ஏறக்குறைய 54 விழுக்காட்டினர் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே ஜூன் 5க்கு முந்தைய இரண்டு வாரங்களில் பாதிக்கப்பட்டனர்.
"2022ஆம் ஆண்டின் ஏப்ரல் மத்தியிலிருந்து உறுதி செய்யப்பட்ட வாராந்திர சளிக்காய்ச்சலின் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகால சராசரியைத் தாண்டிவிட்டது," என்று அந்த கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டது.
அது மட்டுமல்லாமல் 2022ஆம் ஆண்டில் இதுவரை சளிக்காய்ச்சல் தொடர்பில் 27 மரணங்கள் ஏற்பட்டு உள்ளன. 733 சம்பவங் களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களில் ஆறு விழுக்காட்டினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

