'பாகிஸ்தானில் சீனர்கள் தாக்கப் படுவது நிறுத்தப்பட வேண்டும்'

'பாகிஸ்தானில் சீனர்கள் தாக்கப் படுவது நிறுத்தப்பட வேண்டும்'

1 mins read
541b87bb-2898-482b-b004-29efde6672de
-

பெய்­ஜிங்: பாகிஸ்­தா­னில் சீன நாட்­டுத் தொழி­லா­ளி­கள் தொடர்ந்து தாக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். இது­போன்ற சம்­ப­வங்­களுக்கு பாகிஸ்­தான் முடி­வு­கட்ட வேண்­டும் என்று சீன ராணு­வம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இது­தொ­டர்­பாக இரு நாட்டு ராணு­வத் தலை­வர்­களும் அண்­மை­யில் சந்­தித்­துப் பேசி­னர்.

இந்­நி­லை­யில், பாகிஸ்­தா­னின் ராணு­வத் தலைமை தள­பதி காமர் ஜாவித் பாஜ்வா தலை­மை­யி­லான ராணுவக் குழு ஒன்று சீனா­வுக்கு கடந்த 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை­யில் பய­ணம் மேற்­கொண்­டது. அண்­மைய காலங்­க­ளாக பாகிஸ்­தா­னில் தொடர்ந்து சீனர்­கள் தாக்­கப்­பட்டு வரும் நிலை­யில், அதனை கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் பணி­யா­ளர்­கள் மற்­றும் தள­வா­டங்­கள் கொண்ட வெளி­நாட்டு பாது­காப்­புப் பிரிவு ஒன்றை பாகிஸ்­தான் காவல் துறை அலு­வ­ல­கத்­தில் அமைக்க இஸ்­லா­மா­பாத் காவல்­துறை முடிவு செய்­துள்­ளது.

பாகிஸ்­தா­னின் பலு­சிஸ்­தான் பகு­தி­யில் சீனா-பாகிஸ்­தான் பொரு­ளா­தார வழித்­த­டத் திட்­டங்­களில் பணி­பு­ரி­யும் தங்­கள் நாட்டு மக்­கள் குறி வைத்து தாக்­கப்­ப­டு­கின்­ற­னர். அது உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்­டும் என்று சீன ராணு­வம், பாகிஸ்­தான் ராணு­வத் தள­பதி ஜாவித்திடம் வலி­யு­றுத்­தி­ய­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.