அமெரிக்காவின் ஓஹாயோ மாநிலத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு துப்பாக்கி எடுத்துவர அனுமதிக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் முதலில் துப்பாக்கி சுட பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.
குறைந்தது 24 மணி நேரம் பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் அவ்வாறு செய்யமுடியும் என்று புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்பைக் கருதி இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டது.
அமெரிக்காவில் 28 மாநிலங்களில் பள்ள ஊழியர்கள் பள்ளிக்குத் துப்பாக்கி எடுத்துவர அனுமதி உண்டு.