மோன்டானா: கடுமையான வெள்ளம் ஏற்பட்டதால் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான 'எல்லோஸ்டோன்' இயற்கைப் பூங்காவை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
அந்த வட்டாரத்தில் பல கட்டடங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. வெள்ளத்தினால் சாலைகளிலும் பாலங்களிலும் ஏற்பட்ட பாதிப்பை அதிகாரிகள் மதிப்பிட்டுவரும் வேளையில் பூங்காவின் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் 1988ஆம் ஆண்டில் காட்டுத் தீ காரணமாக இந்த இயற்கைப் பூங்கா பொதுமக்களுக்கு மூடப்பட்டது. தற்போது கோடை விடுமுறையில் சுற்றுப்பயணிகள் வரத் தொடங்கும் வேளையில் பூங்கா மூடப்பட்டுள்ளது.
ஐந்து நுழைவாயில்களைக் கொண்ட இயற்கைப் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் சிக்கிக்கொண்டிருக்கும் வருகையாளர்களையும் ஊழியர்களையும் தேடி மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

