இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கு வாரத்தில் மேலும் ஒரு நாள் ஓய்வு அளிக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் இருக்கிறது. இதனால் ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாங்களே வளர்க்க கூடுதல் ஒரு நாள் ஓய்வைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் ஊழியர்களுக்கு ஓய்வு கிடைக்கும்.
தங்கள் குடும்பத்துக்குத் தேவையான பழம், காய்கறிகள் போன்றவற்றை ஊழியர்கள் வளர்க்க அரசாங்கம் ஊக்குவிக்கிறது. உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால், அவர்கள் சாப்பிட போதிய உணவு இருப்பதை இது உறுதிசெய்யும் என அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் அரசாங்கத் துறையில் வேலை பார்க்கின்றனர்.
70 ஆண்டுகளில் இல்லாத ஆக மோசமான பொருளியல் நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது இலங்கை. உணவு, மருந்து, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசாங்கத்தால் இயலவில்லை. அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டிருப்பது இதற்கு காரணம்.
இலங்கை அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் ஒரு நாள் ஓய்வு
15 Jun 2022 20:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Dec 2022 22:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!