குரங்கம்மை: அடுத்த வாரம் அவசரநிலைக் கூட்டம்

ஜெனிவா: தற்போதைய குரங்கம்மை தொற்றை, அனைத்துலக கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலையாக கருத வேண்டுமா என்பதை மதிப்பீடு செய்ய, உலக சுகாதார நிறுவனம் அவசரநிலைக் கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது.

குரங்கம்மை நிரந்தர நோயாக இல்லாத நாடுகளில் அதன் பரவல் குறித்து கலந்தாலோசிக்க சிறப்புக் குழு ஒன்று அடுத்த வாரம் கூடுகிறது என்று ஐரோப்பாவுக்கான சுகாதார நிறுவனத்தின் வட்டார இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் குளூஜ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அனைத்துலக கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலையானது, உலக சுகாதார நிறுவனத்தின் ஆக அதிக எச்சரிக்கை நிலையாகும். அத்தகைய நிலை அறிவிக்கப்பட்டால், தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்துழைக்க உலக நாடுகள் ஊக்குவிக்கப்படும். அத்தகைய சூழலில், பயண ஆலோசனை உள்ளிட்ட பரிந்துரைகளை சுகாதார நிறுவனம் வெளியிடும்.

பல்லாண்டு காலமாக ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகளில் நிரந்தர நோயாகக் கண்டறியப்பட்டு வந்துள்ள குரங்கம்மை தொற்று, தற்போது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தலைகாட்டி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!