பாரிஸ்: ஐஎஸ் தீவிரவாதக் குழுவின் தொடர்புடைய சஹேல் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவரை பிரான்ஸ் படையினர் மாலியில் கைதுசெய்துள்ளதாக பிரான்ஸ் ராணுவம் நேற்று தெரிவித்தது. மாலியில் நீண்ட காலமாக போராளிகளைத் துடைத்தொழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் ராணுவம், அங்கிருந்து தம் படைகளை முழுமையாக மீட்டுக்கொள்வதற்குத் தயாராகி வருகிறது. இந்நிலையில் ஜூன் 11ஆம் தேதி இரவு ஐஎஸ் குழுவைச் சேர்ந்த அவ்மெயா அவல்ட் அல்பாகயெ என்ற மூத்த உறுப்பினரை பிரான்ஸ் ராணுவம் கைது செய்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் ராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
'ஐஎஸ் தீவிரவாதக் குழுவின் மூத்த உறுப்பினர் பிடிபட்டார்'
1 mins read
-

