ஜோகூரை நிர்வகிக்க இளவரசர் நியமனம்

ஜோகூரை நிர்வகிக்க இளவரசர் நியமனம்

1 mins read
73978eee-8c85-4bb4-add9-6cef9e685bcd
-

ஜோகூர்பாரு: ஜோகூர் மன்­னர் இப்­ரா­கிம் இஸ்­கந்­தர், தாம் சில காலம் ஓய்­வெ­டுக்­கப் போவ­தா­க­வும், அந்­தக் கால­கட்­டத்­தில் ஜோகூர் மாநி­லத்தை நிர்­வ­கிக்க, இள­வ­ர­சர் இஸ்­மா­யில் சுல்­தான் இப்­ரா­கிமை தான் நிய­மித்­துள்­ள­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார்.

ஜோகூர் மாநி­லத்­தின் சட்­ட­மன்­றக் கூட்­டத்தை நேற்­றுத் தொடங்கிவைத்­துப் பேசி­ய­போது மன்­னர் இப்­ரா­கிம் இந்த அறி­விப்பை வெளி­யிட்­ட­தாக மலே­சி­யா­வின் பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

தாம் ஓய்­வெ­டுக்­க­வி­ருக்­கும் காலம் குறித்­தும், இள­வ­ர­சர் இஸ்­மா­யில் எவ்­வ­ளவு காலம் பொறுப்பு வகிப்­பார் என்­பது குறித்­தும் மன்­னர் இப்­ரா­கிம் தெரி­விக்­க­வில்லை.

இள­வ­ர­சர் இஸ்­மா­யில், முன்­ன­தாக 2019ஆம் ஆண்­டில் இது­போல் பதவி வகித்­துள்­ளார்.

கடந்த ஜூன் 9ஆம் தேதி, ஜோகூர் டாருல் தாஸிம் (ஜேடிடி) காற்­பந்துக் குழுவின் உரி­மை­யா­ள­ரான இள­வ­ர­சர் இஸ்­மா­யில், ஜோகூர் பாரு­வின் முன்­னணி காற்­பந்து சங்­க­மான 'ஜேடிடி'யில் தாம் வகிக்­கும் பொறுப்­பு­கள் அனைத்­தி­லும் இருந்து வில­கு­வ­தா­க­வும் மற்ற பணி­களில் கவ­னம் செலுத்­தப்­போ­வ­தா­க­வும் அறி­வித்­தி­ருந்­தார். இந்­நி­லை­யில் மன்­னர் இப்­ரா­கிம் இந்த அறி­விப்பை விடுத்­துள்­ளார்.