284 குழந்தைகள் உட்பட 4,509 பேரின் உயிர் பறிப்பு

284 குழந்தைகள் உட்பட 4,509 பேரின் உயிர் பறிப்பு

2 mins read
375c2b1c-a65e-4793-9578-5bb1d4fba55c
-

உக்ரேன் போரில் ஏற்பட்ட உயிருடற்சேதம் குறித்து ஐநா அறிக்கை

கியவ்: உக்­ரேன்­மீது ரஷ்யா தொடுத்­துள்ள படை­யெ­டுப்­பால் பத்­தா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்ட அப்­பாவி மக்­கள் உயி­ரி­ழந்து அல்­லது காய­ம­டைந்­த­தாக ஐக்­கிய நாடு­கள் மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

இம்­மா­தம் 16ஆம் தேதி நில­வரப்­படி, போரில் 4,509 பேர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் 5,585 பேர் காய­ம் அ­டைந்­த­தா­க­வும் ஐநா மனித உரிமை ஆணை­யர் அலு­வ­ல­கம் தெரி­வித்­தது. மாண்­ட­வர்­களில் 284 குழந்­தை­களும் அடங்­கு­வர்.

"பீரங்­கி­கள்மூலம் குண்டு­மழை பொழிந்­தது, ஏவு­க­ணை­களை வீசி­யது, வான்­வ­ழி­யா­கத் தாக்­கி­யது போன்­ற­வையே அப்­பாவி மக்­கள் பல­ரும் இறக்க கார­ணம்," என்று ஐநா அறிக்கை குறிப்­பிட்­டது.

மேலும், உயி­ரு­டற்­சேத பாதிப்பு உண்­மை­யில் இன்­னும் அதி­க­மாக இருக்­கும் என்­றும் அது கூறி­யது.

இத­னி­டையே, பாம்­புத் தீவிற்கு ஆயு­தங்­களை ஏற்­றிச் சென்ற ரஷ்யக் கப்­பல் ஒன்று, தனது ஏவு­கணைத் தாக்­கு­த­லில் சிக்கி, நீரில் மூழ்­கி­விட்­ட­தாக உக்­ரேன் தெரி­வித்­துள்­ளது.

அந்­தக் கப்­பல் எதிர்ப்பு ஏவு­கணை­களை உக்­ரே­னுக்கு டென்­மார்க் வழங்­கி­யி­ருந்­தது.

ஆயி­னும், ரஷ்­யத் தரப்­பி­லி­ருந்து இந்­தத் தக­வல் இன்­னும் உறு­திப்­படுத்­தப்­ப­ட­வில்லை.

அதே வேளை­யில், உக்­ரே­னி­யப் படை­க­ளின் தாக்­கு­தல் கார­ண­மாக கிழக்கு உக்­ரே­னில் டொனட்ஸ்க் பகு­தி­யி­லுள்ள ஒரு நிலக்­க­ரிச் சுரங்­கத்­தி­னுள் இருந்து வெளியே வர முடி­யா­மல் 77 ஊழி­யர்­கள் சிக்­கி­ இருப்­ப­தாக ரஷ்யா தெரி­வித்­துள்­ளது. சு­ரங்­கத்­திற்­கான மின்­விநி­யோ­கம் துண்­டிக்­கப்­பட்­டு­விட்­டது.

ஆகஸ்ட்­டில் பேச்சு நடத்த திட்டம்

ரஷ்­யப் படை­கள் மீதான எதிர்த்­தாக்­கு­தல் நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து வரும் நிலை­யில், ஆகஸ்ட் மாத இறு­தி­வாக்­கில் அந்­நாட்­டு­ட­னான பேச்­சு­வார்த்­தையை மீண்­டும் தொடங்க உக்­ரேன் திட்­ட­மி­டு­கிறது. அப்­போது, பேச்­சு­வார்த்­தைக்­குத் தமது நாடு இன்­னும் மேம்­பட்ட நிலை­யில் இருக்­கும் என்­றார் உக்­ரே­னின் தலை­மைப் பேச்­சு­வார்த்­தை­யா­ளர் டேவிட் அரக்கா­மியா.

ரஷ்­யப் பிடி­யில் அமெ­ரிக்­கர் இரு­வர்

இதற்­கி­டையே, உக்­ரே­னிய ராணு­வம் சார்­பில் போரில் பங்­கேற்று, கடந்த வாரம் காணா­மல் போன அமெ­ரிக்­கர்­கள் இரு­வ­ரும் ரஷ்­யப் படை­க­ளி­டம் பிடி­பட்­ட­னர். அவர்­கள் இடம்­பெற்­றுள்ள காணொ­ளி­களை ரஷ்ய அர­சாங்­கத் தொலைக்­காட்சி நிறு­வ­ன­மான 'ஆர்டி' வெளி­யிட்­டுள்­ளது.

அலெக்­சாண்­டர் டுரூக், ஆண்டி ஹுய்ன் என்ற அந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் இரு­வ­ரும் எங்­குள்­ள­னர் என்­பது தெரி­ய­வில்லை என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­தார்.