முகைதீன்மீது புகார்

முகைதீன்மீது புகார்

2 mins read
4efc44a3-5886-4999-9e58-97f291867493
-

மலாக்கா: முன்­னாள் மலே­சி­யப் பிர­த­ம­ரும் பெர்­சத்­துக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான முகை­தீன் யாசின் (படம்), ஒரு தனி­யார் நிறு­வ­னத்­தி­டம் இருந்து 1.3 மில்­லி­யன் ரிங்­கிட் (S$410,000) பணம் பெற்­ற­தா­கக் காவல்­து­றை­யில் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

அம்னோ உச்­ச­மன்ற உறுப்­பினர் லோக்­மான் நூர் ஆதம் நேற்று முன்­தி­னம் காலை­யில் சுங்கை ஊடாங் காவல் நிலை­யத்­தில் அப்­பு­காரை அளித்­தார்.

"அப்­பு­காரை எந்­தத் தண்­ட­னைச் சட்­டப் பிரி­வின்­கீழ் வகைப்­படுத்­து­வது என்று விரை­வில் முடி­வு­செய்து, அதன்­பின்­னர் விசா­ர­ணை­யைத் தொடங்­கு­வோம்," என்று மலாக்கா தெங்கா காவல்­துறை துணை ஆணை­யர் கிறிஸ்­ட­ஃபர் பட்­டிட் தெரி­வித்­தார்.

அம்னோ தலை­வர் அக­மது ஸாகித் ஹமிடிமீது நீதி­மன்­றத்­தில் ஊழல் வழக்கு விசா­ரணை நடந்து வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற விசா­ர­ணை­யின்­போது அல்ட்ரா கிரானா நிறு­வ­னத்­தின் நிர்­வாக மேலா­ளர் டேவிட் டான் என்­ப­வர் சாட்­சி­யம் அளித்­தார். அப்­போது, 2018ஆம் ஆண்­டில் திரு முகை­தீன் நாட்­டின் உள்­துறை அமைச்­ச­ராக இருந்­த­போது தமது நிறு­வ­னம் அவ­ருக்கு 1.3 மி. ரிங்­கிட் வரை வழங்­கி­ய­தா­கக் கூறி­னார்.

ஆனால், தன்­மீ­தான இந்­தக் குற்­றச்­சாட்டை திரு முகை­தீன் மறுத்­துள்­ளார்.

"அது முற்­றி­லும் பொய்­யா­னது. அதை உறு­தி­யாக மறுக்­கிறேன்," என்று ஃபேஸ்புக் வழி­யாக திரு முகை­தீன் தெரி­வித்­துள்­ளார்.

அந்­தப் பணம் வழங்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் வேளை­யில், தாம் புற்­று­நோய்க்­குச் சிகிச்சை பெற்று வந்­த­தா­க­வும் ஓரு சில மாதங்­கள் விடுப்பு எடுத்­தி­ருந்­த­தா­க­வும் அவர் விளக்­கி­யுள்­ளார்.

கணை­யத்­தில் உரு­வான கட்­டிக்­காக சிங்­கப்­பூர் மவுன்ட் எலி­ச­பெத் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்ற திரு முகை­தீன், 2018 ஆகஸ்ட்­டில் சிகிச்சை முடிந்து திரும்­பி­னார்.