அடுத்த கொவிட்-19 அலைக்கு ஆயத்தமாகும் இந்தோனீசியா

அடுத்த கொவிட்-19 அலைக்கு ஆயத்தமாகும் இந்தோனீசியா

1 mins read
44aa2a68-ec7d-4662-a5f9-367149818059
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் சமூக அள­வில் முதன்­மு­த­லாக ஓமிக்­ரான் துணைத் திரி­பு­கள் பிஏ4 மற்­றும் பிஏ5 பர­வல் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இத­னால், இன்­னொரு கொவிட்-19 அலை வீசும் சாத்­தி­ய­முள்­ள­தால் அதனை எதிர்­கொள்ள அந்­நாட்­டுச் சுகா­தார அதி­கா­ரி­கள் ஆயத்­த­மாகி வரு­கின்­ற­னர்.

ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிரு­மி­யைக் காட்­டி­லும் இரு புதிய துணைத் திரி­பு­களும் மிக அதி­க­மா­கப் பர­வக்­கூ­டி­யது எனக் கூறப்­படு­கிறது. தென்­னாப்­பி­ரிக்கா, பிரிட்­டன், அமெ­ரிக்கா உள்­ளிட்ட பத்­துக்­கும் மேற்­பட்ட நாடு­களில் அவை ஏற்­கெ­னவே பரவி வரு­கின்­றன.

கடந்த மூன்று வாரங்­க­ளாக இந்­தோ­னீ­சி­யா­வில் கொவிட்-19 பர­வல் ஏறு­மு­கத்­தில் இருக்­கிறது. மே மாத இறு­தி­யில் 1,800ஆக இருந்த வாராந்­தி­ரத் தொற்று எண்­ணிக்கை இவ்­வா­ரத்­தில் 3,600ஆக உயர்ந்­து­விட்­டது.

சென்ற புதன்­கி­ழமை மட்­டும் அங்கு புதி­தாக 1,242 பேருக்­குத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. கடந்த ஏப்­ர­லில் இருந்து, இதுவே ஆக அதி­கம் எனக் கூறப்­பட்­டது.

மக்­கள் நட­மாட்­டம் அதி­க­ரிப்பு, சுகா­தார நெறி­மு­றை­க­ளைச் சரி­வரப் பின்­பற்­றா­தது, புதிய துணைத் திரி­பு­கள் உள்­ளிட்­ட­வையே இந்த அதிகரிப்பிற்குக் காரணமாகச் சொல்­லப்­ப­டு­கிறது.