சீக்கியக் கோவிலில் துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு

சீக்கியக் கோவிலில் துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு

1 mins read
b3ef6060-bb93-494c-b6bc-cd38958db7cd
-

காபூல்: ஆப்­கா­னிஸ்­தான் தலை­நகர் காபூ­லில் இருக்கும் சீக்­கியக் கோவில் ஒன்றில் நேற்­றுக் காலை துப்­பாக்­கிக்­கா­ரர்­கள் நுழைந்து திடீர்த் தாக்­கு­த­லில் இறங்­கி­னர். இதில் குறைந்­தது ஒரு­வர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் எழு­வர் காய­முற்­ற­தா­க­வும் ஆப்­கான் உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

துப்­பாக்­கிக்­கா­ரர்­கள் குறைந்­தது ஒரு கையெ­றி­குண்டை வீசி­ய­தா­க­வும் அக்­கோ­வில் வளா­கத்­தின் ஒரு பகு­திக்­குத் தீ வைத்­த­தா­க­வும் அமைச்­சின் பேச்­சா­ளர் அப்­துல் நஃபி தக்­கோர் கூறி­னார்.

சில நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு அப்­ப­கு­தி­யில் ஒரு கார்­குண்டு வெடித்­தது என்­றும் அதில் யாருக்­கும் பாதிப்­பில்லை என்­றும் அவர் சொன்­னார்.

இத­னைத் தொடர்ந்து, கோவி­லைப் பாது­காக்க இடம்­பெற்ற நட­வ­டிக்­கை­யில் தாக்­கு­தல்­கா­ரர்­கள் இரு­வர் கொல்­லப்­பட்­ட­னர். சண்­டை­யில் தலி­பான் படை­வீ­ரர் ஒரு­வ­ரும் மாண்­டு­போ­னார்.

கோவி­லுக்­குள் இருந்து துப்­பாக்கி சுடும் சத்­தத்­தை­யும் வெடிப்­புச் சத்­தத்­தை­யும் தாம் கேட்­ட­தாக குர்­னம் சிங் என்பவர் கூறி­னார்.

தாக்­கு­தல் குறித்த செய்தி பர­வி­ய­தும் காபூ­லில் உள்ள மற்ற சீக்­கி­யக் கோவில்­களில் சில பாது­காப்பு கருதி மூடப்­பட்­டன.

ஆப்­கா­னில் 1970களில் ஏறக்­கு­றைய அரை மில்­லி­யன் சீக்­கி­யர்­கள் இருந்த நிலை­யில், இப்­போது அந்த எண்­ணிக்கை வெறும் 200ஆகக் குறைந்துவிட்டது.